Newsஅமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு - நால்வர் பலி

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு – நால்வர் பலி

-

அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புள்ளது. 

நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் எதற்காக கொலை செய்தார்கள் என்பது தொடர்பில் காரணம் வெளியாகவில்லை.

மேலும் இதற்கு முன்பு பர்மிங்காம் அருகே ராக்லாண்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

நன்றி தமிழன்

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கரை ஒதுங்கியதில் 28 திமிங்கலங்கள் உயிரிழப்பு

மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 160க்கும் மேற்பட்ட திமிங்கலங்களில் 28 இறந்துவிட்டன. 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு விட தன்னார்வ குழுக்கள் நடவடிக்கை...

மெல்போர்னின் Highpoint ஷாப்பிங் சென்டரில் மற்றொரு கத்திக்குத்து

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மைனர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள்...

சுற்றுலாப் பயணிகள் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியா இடம்பிடித்துள்ளது. CEOWORLD இதழ் இந்த நாடுகளுக்கு 2024 ஆம் ஆண்டையொட்டி பெயரிட்டுள்ளது. இங்கு விஜயம்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற விரும்புவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற எதிர்பார்த்துள்ள சர்வதேச மாணவர்களுக்காக புதிய விழிப்புணர்வு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழக இணையதளத்திற்குச்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...