Sportsவெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா - குறுக்கிட்ட மழையால் பஞ்சாப் வெற்றி...

வெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா – குறுக்கிட்ட மழையால் பஞ்சாப் வெற்றி – IPL 2023

-

ஐபிஎல் தொடரில் நேற்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின.

இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து பனுகா ராஜபக்ஷ களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ராஜபக்ஷ 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ரஹ்மத்துலா குர்பாஸ் ஆகியோர் களம் புகுந்தனர்.

இதில் மந்தீப் 2 ஓட்டம், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ஓட்டம், குர்பாஸ் 22 ஓ ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று துடுப்பாட்டமாட மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ஓட்டம், ரிங்கு சிங் 4 ஓட்டம், ரஸல் 35 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி நிறுத்தி வைக்க்கப்பட்டது.

மழை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை நிற்காத காரணத்தால் ஆட்டம் முடிக்கப்பட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 146 ஓட்டங்களே எடுத்திருந்தது. இதையடுத்து 7 ஓட்டம் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...