Sportsவெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா - குறுக்கிட்ட மழையால் பஞ்சாப் வெற்றி...

வெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா – குறுக்கிட்ட மழையால் பஞ்சாப் வெற்றி – IPL 2023

-

ஐபிஎல் தொடரில் நேற்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின.

இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து பனுகா ராஜபக்ஷ களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ராஜபக்ஷ 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ரஹ்மத்துலா குர்பாஸ் ஆகியோர் களம் புகுந்தனர்.

இதில் மந்தீப் 2 ஓட்டம், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ஓட்டம், குர்பாஸ் 22 ஓ ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று துடுப்பாட்டமாட மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ஓட்டம், ரிங்கு சிங் 4 ஓட்டம், ரஸல் 35 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி நிறுத்தி வைக்க்கப்பட்டது.

மழை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை நிற்காத காரணத்தால் ஆட்டம் முடிக்கப்பட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 146 ஓட்டங்களே எடுத்திருந்தது. இதையடுத்து 7 ஓட்டம் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...