News ட்விட்டரில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு

ட்விட்டரில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு

-

ட்விட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அறிவிப்பை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில், ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் விடியோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், முக்கியமானவைகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

இதனை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று எலான் மஸ்க் டுவீட் செய்துள்ளார்.

மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, ட்விட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள். 

இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் உங்கள் வேலையை மேம்படுத்தவும் நாங்கள் உதவுவோம், படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...