Brisbaneஉலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

-

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 33 வயதான லூகாஸ் ஹெல்ம்கே என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நபர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். 

இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது.இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு அவுஸ்திரேலியரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

இதனை லூகாஸ் முறியடித்து இருக்கிறார். தனது ஒரு வயது மகனுக்கு ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சாதனை முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.இதற்காக 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார். 

பிரிஸ்பேனில் தனக்கென பளுதூக்கும் ஜிம் ஒன்றையும் வைத்திருக்கும் லூகாஸ், இந்த சாதனை முயற்சியையும் அந்த உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தி காட்டியிருக்கிறார்.இதனுடன் தனது சாதனையை முடித்து கொள்ள அவர் விரும்பவில்லை.

அதனால், இனி ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு சாதனையையாவது முறியடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...