Brisbaneஉலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

-

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 33 வயதான லூகாஸ் ஹெல்ம்கே என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நபர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். 

இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது.இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு அவுஸ்திரேலியரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

இதனை லூகாஸ் முறியடித்து இருக்கிறார். தனது ஒரு வயது மகனுக்கு ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சாதனை முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.இதற்காக 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார். 

பிரிஸ்பேனில் தனக்கென பளுதூக்கும் ஜிம் ஒன்றையும் வைத்திருக்கும் லூகாஸ், இந்த சாதனை முயற்சியையும் அந்த உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தி காட்டியிருக்கிறார்.இதனுடன் தனது சாதனையை முடித்து கொள்ள அவர் விரும்பவில்லை.

அதனால், இனி ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு சாதனையையாவது முறியடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...