Newsகென்யாவில் ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட 10 சிங்கங்கள்

கென்யாவில் ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட 10 சிங்கங்கள்

-

கென்யாவில் உலகின் வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உட்பட 10 சிங்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டுள்ளது , இது வனத்துறை அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘கென்யாவில் உள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் இருந்த வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ஆண் சிங்கம் லூன்கிடோ உணவுக்காக ஓல்கெலுனியேட் கிராமத்திற்கு சென்றுள்ளது. 

அப்போது அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்களால் ஈட்டியால் தாக்கப்பட்டு அச்சிங்கம் உயிரிழந்துள்ளது. 

அதற்கு வயது 19. கொல்லப்பட்ட சிங்கம் கென்யாவின் வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கென்யாவின் வனவிலங்கு பாதுகாப்பாளரும், வைல்ட் லைஃப் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவுலா தெரிவிக்கையில்,

இது மனித – வனவிலங்கு மோதலின் விளைவாகும். சிங்கம் கொல்லப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். நாட்டில் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கென்யாவின் தென் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உணவைத் தேடும் முயற்சியில் ஊருக்குள் சென்றதால் கிராம மக்களால் கொல்லப்பட்டதாக கென்யாவின் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

One Nation-இல் சேர Branaby Joyce-இற்கு அழைப்பு!

முன்னாள் துணைப் பிரதமர் Branaby Joyce-ஐ One Nation-இல் சேர Pauline Hanson அழைப்பு விடுத்துள்ளார். Branaby சமீபத்தில் தேசியக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தனக்கும்...

Bluesky-உடன் இணையும் வெள்ளை மாளிகை

எலோன் மஸ்க்கின் "X" சமூக ஊடக தளத்திற்கு போட்டியாளரான Bluesky-உடன் வெள்ளை மாளிகை இணைந்துள்ளது. அதன் முதல் பதிவாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து பல்வேறு மீம்ஸ்கள்,...

டிரம்பை சந்திக்க செல்கிறார் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாளை வெள்ளை மாளிகைக்கு சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் காணொளி குறித்து கிரிக்கெட் உலகில் சில விவாதங்கள் நடந்தன. இந்த சர்ச்சைக்குரிய காணொளி, கைகுலுக்காததற்காக இந்தியாவை கேலி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ஆசிய...