Newsகென்யாவில் ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட 10 சிங்கங்கள்

கென்யாவில் ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட 10 சிங்கங்கள்

-

கென்யாவில் உலகின் வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உட்பட 10 சிங்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டுள்ளது , இது வனத்துறை அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘கென்யாவில் உள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் இருந்த வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ஆண் சிங்கம் லூன்கிடோ உணவுக்காக ஓல்கெலுனியேட் கிராமத்திற்கு சென்றுள்ளது. 

அப்போது அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்களால் ஈட்டியால் தாக்கப்பட்டு அச்சிங்கம் உயிரிழந்துள்ளது. 

அதற்கு வயது 19. கொல்லப்பட்ட சிங்கம் கென்யாவின் வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கென்யாவின் வனவிலங்கு பாதுகாப்பாளரும், வைல்ட் லைஃப் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவுலா தெரிவிக்கையில்,

இது மனித – வனவிலங்கு மோதலின் விளைவாகும். சிங்கம் கொல்லப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். நாட்டில் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கென்யாவின் தென் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உணவைத் தேடும் முயற்சியில் ஊருக்குள் சென்றதால் கிராம மக்களால் கொல்லப்பட்டதாக கென்யாவின் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து மக்களுக்கு வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பவழக்கடலில் நகர்ந்து செல்வதால்...

அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை செய்யப்போகின்றவர்களுக்கும் ஏற்படவுள்ள பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளி 21 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர் தாக்குதல்

ஈரானில் பல அணுமின் நிலையங்கள் உள்ள நகரம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம்...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

மெல்போர்ன் பெண்கள் பள்ளி மாணவிகள் குழுவிற்கு நிகழ்ந்த அநீதி

மெல்போர்னில் உள்ள பெண்கள் பள்ளி மாணவிகள் தோலின் நிறம் காரணமாக பள்ளி புகைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் தோல் நிறம் மற்றும் மதம் காரணமாக...