Sportsபஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி - IPL...

பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி – IPL 2023

-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ஓட்டங்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ஓட்டங்களும் , விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். அதன்பின்னர் ரூசோ அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்கள் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உட்பட 82 ஓட்டங்கள் குவித்தார். பில் சால்ட் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.இதில், அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 48 ஓட்டங்களில் 94 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

தொடர்ந்து, அதர்வா டைட் 55 ஓட்டங்களும், பிரப்சிம்ரன் சிங் 22 ஓட்டங்களும், சாம் குரான் 11 ஓட்டங்களும், ஷாருக்கான் 6 ஓட்டங்களும் குவித்தனர்.

கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் சஹார் ஓட்டங்கள் எடுக்கவில்லை. இதன் முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...