Sportsபஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி - IPL...

பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி – IPL 2023

-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ஓட்டங்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ஓட்டங்களும் , விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். அதன்பின்னர் ரூசோ அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்கள் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உட்பட 82 ஓட்டங்கள் குவித்தார். பில் சால்ட் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.இதில், அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 48 ஓட்டங்களில் 94 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

தொடர்ந்து, அதர்வா டைட் 55 ஓட்டங்களும், பிரப்சிம்ரன் சிங் 22 ஓட்டங்களும், சாம் குரான் 11 ஓட்டங்களும், ஷாருக்கான் 6 ஓட்டங்களும் குவித்தனர்.

கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் சஹார் ஓட்டங்கள் எடுக்கவில்லை. இதன் முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

2063ல் நாட்டின் முதியோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படும்

மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் வடிவத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு தலைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2063 ஆம் ஆண்டளவில், இலங்கையில்...

NDIS அமைப்பிலிருந்து விலக்கப்படும் செரிமானக் கோளாறுகள் உள்ள குழந்தைகள்

இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை NDIS அமைப்பிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட...

AUKUS ஒப்பந்தத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான திட்டங்கள்

AUKUS ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான புதுமை மற்றும் செலவுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முத்தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா...

ஆஸ்திரேலிய எல்லைப் படைகளின் பிடியில் இருந்து அகதிகள் படகு ஒன்று தப்பியது

அவுஸ்திரேலிய கடற்படை எல்லைப் படையில் இருந்து 12 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மேற்கு...

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களை ஆய்வு செய்த...

இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்!

சம்பள தகராறு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான விக்டோரியா காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் விக்டோரியா பொலிஸ்...