Sportsஅதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி - IPL 2023

அதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி – IPL 2023

-

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.

ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசென் பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 49பந்துகளில் சதம் அடித்தார், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

187 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர்.

ஐதராபாத் பந்துவீச்சை மொத்தமாக நொறுக்கினர். இதில் விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் சதம் அடித்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டு பிளசிஸ் 47 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் பிராஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.

இறுதியில் 4 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...