Sportsஅதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி - IPL 2023

அதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி – IPL 2023

-

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.

ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசென் பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 49பந்துகளில் சதம் அடித்தார், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

187 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர்.

ஐதராபாத் பந்துவீச்சை மொத்தமாக நொறுக்கினர். இதில் விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் சதம் அடித்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டு பிளசிஸ் 47 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் பிராஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.

இறுதியில் 4 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...