Sportsதந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

-

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்காததற்கு, தந்தைக்கு அளித்த வாக்குறுதியே காரணமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுதோறும் 10 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வந்த போது, அப்போது தான் பாடசாலையில் இருந்து வந்திருந்தேன். பல விளம்பர வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் எனது தந்தை ஒருபோதும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த கூடாதென கூறினார். ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு வாய்ப்பை கூடஏற்றதில்லை.

என் தந்தை ரமேஷ் டெண்டுல்கருக்கு என்னிடம், ‘நீ ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்போது ஏராளமானோர் உன்னை பின்பற்றுவர்’ என்றார். எனவே தான், புகையிலை அல்லது மது சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவில்லை.

1990களில் எனது துடுப்பாட்ட மட்டையில் 2 ஆண்டுகள் ஸ்டிக்கர் இல்லை . என்னுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் சிகரெட் விளம்பரம் இடம்பெற்றிருக்கும்.

என் தந்தைக்கு அளித்த வாக்குறுதி காரணமாக இந்த விளம்பரங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. எனது துடுப்பாட்ட மட்டையில் அவர்களது விளம்பரம் இடம்பெற பல சலுகைகளை அளித்தனர். ஆனால் அதற்கு ஒப்புகொண்டதில்லை. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறேன். என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை ஒருபோதும் மீறியதில்லை.- இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 50 சர்வதேச குற்றவாளிகள்

10 நாடுகளில் ஏராளமான குற்றங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு...

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி

இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ரோஜர்...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வேலைகளில் உதவாத ஆண்கள் – சமீபத்திய வெளிப்பாடு

ஆஸ்திரேலியாவில் ஆண்கள் இன்னும் வீட்டு வேலைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியப் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளைச் செய்வதில்...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...

மீண்டும் சேவையை தொடங்குகின்றன குயின்ஸ்லாந்து விமானங்கள்

குயின்ஸ்லாந்து விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பிரிஸ்பேர்ண் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இன்னும் ரத்து...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...