Sportsதந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

-

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்காததற்கு, தந்தைக்கு அளித்த வாக்குறுதியே காரணமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுதோறும் 10 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வந்த போது, அப்போது தான் பாடசாலையில் இருந்து வந்திருந்தேன். பல விளம்பர வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் எனது தந்தை ஒருபோதும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த கூடாதென கூறினார். ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு வாய்ப்பை கூடஏற்றதில்லை.

என் தந்தை ரமேஷ் டெண்டுல்கருக்கு என்னிடம், ‘நீ ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்போது ஏராளமானோர் உன்னை பின்பற்றுவர்’ என்றார். எனவே தான், புகையிலை அல்லது மது சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவில்லை.

1990களில் எனது துடுப்பாட்ட மட்டையில் 2 ஆண்டுகள் ஸ்டிக்கர் இல்லை . என்னுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் சிகரெட் விளம்பரம் இடம்பெற்றிருக்கும்.

என் தந்தைக்கு அளித்த வாக்குறுதி காரணமாக இந்த விளம்பரங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. எனது துடுப்பாட்ட மட்டையில் அவர்களது விளம்பரம் இடம்பெற பல சலுகைகளை அளித்தனர். ஆனால் அதற்கு ஒப்புகொண்டதில்லை. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறேன். என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை ஒருபோதும் மீறியதில்லை.- இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...