Sportsதந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

-

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்காததற்கு, தந்தைக்கு அளித்த வாக்குறுதியே காரணமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுதோறும் 10 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வந்த போது, அப்போது தான் பாடசாலையில் இருந்து வந்திருந்தேன். பல விளம்பர வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் எனது தந்தை ஒருபோதும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த கூடாதென கூறினார். ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு வாய்ப்பை கூடஏற்றதில்லை.

என் தந்தை ரமேஷ் டெண்டுல்கருக்கு என்னிடம், ‘நீ ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்போது ஏராளமானோர் உன்னை பின்பற்றுவர்’ என்றார். எனவே தான், புகையிலை அல்லது மது சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவில்லை.

1990களில் எனது துடுப்பாட்ட மட்டையில் 2 ஆண்டுகள் ஸ்டிக்கர் இல்லை . என்னுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் சிகரெட் விளம்பரம் இடம்பெற்றிருக்கும்.

என் தந்தைக்கு அளித்த வாக்குறுதி காரணமாக இந்த விளம்பரங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. எனது துடுப்பாட்ட மட்டையில் அவர்களது விளம்பரம் இடம்பெற பல சலுகைகளை அளித்தனர். ஆனால் அதற்கு ஒப்புகொண்டதில்லை. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறேன். என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை ஒருபோதும் மீறியதில்லை.- இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...