Newsஅழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் - அதிர்ச்சியில்...

அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் – அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

-

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. 

பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இதைதொடர்ந்து வெற்றியாளரை அறிவிப்பதற்காக 2 பேரும் மேடை ஏற்றப்பட்டனர். பின்னர் போட்டியில் பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட இருந்தது. 

அப்போது போட்டியில் 2-ம் இடம் பிடித்த நதாலியின் கணவர் திடீரென மேடை ஏறினார். அவர் பெலினிக்கு சூட்டப்பட இருந்த கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்தார். 

கீழே விழுந்த கிரீடத்தை மீண்டும் எடுத்து மறுபடியும் தரையில் அடித்து உடைத்தார். இதனால் அந்த கிரீடம் துண்டுதுண்டாக உடைந்தது. 

இதைப்பார்த்த நடுவர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

விழா ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து அவரை மேடையில் இருந்து கீழே இறக்கினர். 

அப்போது நதாலியின் கணவர் தெரிவிக்கையில் ,

நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. எனவே தான் கோபத்தில் இவ்வாறு செய்தேன் என்றார். ஆனால் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Latest news

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...