News6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர் பணி நீக்கம்

6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர் பணி நீக்கம்

-

னாவில் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் கழிவறையில் நேரத்தை கழித்த ஊழியர் ஒருவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீனாவை சேர்ந்த வாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் அல்லாத ஊழியராக நிறுவனம் அவரை நியமித்தது.

வயிற்று பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டது.இருந்தாலும் வலி இருப்பதாக அவர் உணர்ந்தார்.

அதன்பிறகு தொடர்ந்து அவர் கழிவறையில் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வேலை நேரத்தின்போது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கழிவறைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் 47 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை கழிவறையில்தான் இருப்பாராம். இது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்துள்ளது.

இதை அறிந்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை அவர் எவ்வளவு நேரம் கழிப்பறை சென்றுள்ளார் என கணக்கெடுத்தது. அப்போதுதான் 47 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை கழிப்பறையில் நேரத்தை கழித்தது தெரியவந்தது.

வேலை நேரத்தில் சுமார் 6 மணி நேரம் கழிவறையில்தான் இருந்துள்ளார் என்பதை அறிந்த நிறுவனம் அவரை செப்டம்பர் 23 ஆம் திகதி வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியது.

ஊழியர்களுக்கான கையேட்டில் சோம்பேறித்தனம், முன்னதாகவே வேலையில் இருந்து சென்றுவிடுதல், சரியான விளக்கம் அளிக்காமல் விடுமுறை எடுத்தல் ஆகியவை வேலையில் இருந்து நீக்க தகுதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், வாங் தன்னை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீண்ட காலமாக விசாரணை செய்து வந்த நீதிமன்றம் நிறுவனம் வாங்-ஐ வேலையில் இருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது என அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...