News 6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர் பணி நீக்கம்

6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர் பணி நீக்கம்

-

னாவில் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் கழிவறையில் நேரத்தை கழித்த ஊழியர் ஒருவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீனாவை சேர்ந்த வாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் அல்லாத ஊழியராக நிறுவனம் அவரை நியமித்தது.

வயிற்று பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டது.இருந்தாலும் வலி இருப்பதாக அவர் உணர்ந்தார்.

அதன்பிறகு தொடர்ந்து அவர் கழிவறையில் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வேலை நேரத்தின்போது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கழிவறைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் 47 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை கழிவறையில்தான் இருப்பாராம். இது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்துள்ளது.

இதை அறிந்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை அவர் எவ்வளவு நேரம் கழிப்பறை சென்றுள்ளார் என கணக்கெடுத்தது. அப்போதுதான் 47 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை கழிப்பறையில் நேரத்தை கழித்தது தெரியவந்தது.

வேலை நேரத்தில் சுமார் 6 மணி நேரம் கழிவறையில்தான் இருந்துள்ளார் என்பதை அறிந்த நிறுவனம் அவரை செப்டம்பர் 23 ஆம் திகதி வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியது.

ஊழியர்களுக்கான கையேட்டில் சோம்பேறித்தனம், முன்னதாகவே வேலையில் இருந்து சென்றுவிடுதல், சரியான விளக்கம் அளிக்காமல் விடுமுறை எடுத்தல் ஆகியவை வேலையில் இருந்து நீக்க தகுதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், வாங் தன்னை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீண்ட காலமாக விசாரணை செய்து வந்த நீதிமன்றம் நிறுவனம் வாங்-ஐ வேலையில் இருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது என அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கூர்மையான ஆயுதங்கள் சட்டங்கள் கடுமையாக்கும் NSW

கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

கிழக்கு விக்டோரியாவில் பல பகுதிகளுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரியாகோலாங், குல்லோடன், மூர்னபா, ஸ்டாக்டேல் ஆகிய பகுதிகளில் 04...

செப்டம்பர் மாதத்தில் வீடு மற்றும் சொத்துகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

செப்டம்பர் மாதத்திலும் இந்த நாட்டில் வீடு மற்றும் சொத்து விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு...

குழந்தை பராமரிப்புக் கட்டணத்தை குறைக்கத் தவறியது குறித்த அறிக்கை

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை குறைக்க தொழிலாளர் அரசாங்கம் பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவுஸ்திரேலிய குடும்பங்களின்...

NRL இறுதிப் போட்டி நாளில் NSW – சிட்னியில் பதிவாகிய அதிகபட்ச வெப்பநிலை

மிகவும் வெப்பமான காலநிலையுடன் நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகளில் முழு தீ தடுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு சிட்னி...

இன்று முதல் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு உடல்நலக் காப்பீட்டு பிரீமியம்

சுமார் 05 மில்லியன் அவுஸ்திரேலியர்களை பாதிக்கும் வகையில் இன்று முதல் சுகாதார காப்புறுதி பிரீமியத்தை அதிகரிக்க 05 காப்புறுதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.