இந்த குளிர்காலம் தொடங்கும் முன் போதிய பனிப்பொழிவு இல்லாததால் ஆஸ்திரேலியாவில் பனிச்சறுக்கு மைதானங்கள் திறப்பது தாமதமாகும் அறிகுறிகள் தென்படுகின்றன.
பொதுவாக, இந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி பனி மண்டலங்கள் திறக்கப்பட்டாலும், பல மலைப்பகுதிகளில் இதுவரை போதுமான பனிப்பொழிவு இல்லை.
விக்டோரியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்னோ ரிசார்ட்டான மவுண்ட் புல்லரில் வரும் 16ம் தேதி வரை போதிய பனிப்பொழிவு இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குளிர்காலம் மிகவும் வறண்டதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இதேவேளை, விக்டோரியா மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பு வளிமண்டலவியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது வரை மெல்போர்ன் குடிநீர் வழங்கல் பிரிவின் கீழ் இருந்த போதிலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வந்த பெருவெள்ளம் குறித்து உரிய முன்னெச்சரிக்கை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.