Newsபிரான்சில் ஒருபக்கம் மக்கள் போராட்டம் - மறுபக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி கொண்டாட்டம்

பிரான்சில் ஒருபக்கம் மக்கள் போராட்டம் – மறுபக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி கொண்டாட்டம்

-

பிரான்சில் சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.

போராட்டம் வன்முறையாக மாறியதில், பாடசாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் அவரது ட்விட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

பாரிசில் வன்முறை பரவியதில், 40 கார்கள் தீக்கிரையாகியுள்ளன. 170 பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவரது மனைவி பிரிகிட் உடன் பாரிஸ் நகரில் அக்கார் அரீனா பகுதியில் நடந்த 75 வயதுடைய எல்டன் ஜான் என்ற இங்கிலாந்து பாடகரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் பாடலுக்கு ஏற்ப, நடனம் ஆடினார். ஒருபுறம் பொலிஸாருக்கு எதிராக பிரான்சில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஜனாதிபதி மேக்ரான் அவரது மனைவியுடன் இசை கச்சேரியில் கைத்தட்டி, நடனம் ஆடியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...