Newsபிரான்சில் ஒருபக்கம் மக்கள் போராட்டம் - மறுபக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி கொண்டாட்டம்

பிரான்சில் ஒருபக்கம் மக்கள் போராட்டம் – மறுபக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி கொண்டாட்டம்

-

பிரான்சில் சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.

போராட்டம் வன்முறையாக மாறியதில், பாடசாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் அவரது ட்விட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

பாரிசில் வன்முறை பரவியதில், 40 கார்கள் தீக்கிரையாகியுள்ளன. 170 பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவரது மனைவி பிரிகிட் உடன் பாரிஸ் நகரில் அக்கார் அரீனா பகுதியில் நடந்த 75 வயதுடைய எல்டன் ஜான் என்ற இங்கிலாந்து பாடகரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் பாடலுக்கு ஏற்ப, நடனம் ஆடினார். ஒருபுறம் பொலிஸாருக்கு எதிராக பிரான்சில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஜனாதிபதி மேக்ரான் அவரது மனைவியுடன் இசை கச்சேரியில் கைத்தட்டி, நடனம் ஆடியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Latest news

Air Vanuatu நெருக்கடியால் தவித்து வரும் ஆஸ்திரேலிய பயணிகள் 

எர்ன்ஸ்ட் அண்ட் யங் தேசிய விமான நிறுவனமான ஏர் வனுவாடுவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டுவில் பயணிகள் இன்னும் சிக்கித் தவித்து வருவதாகவும், இடைநிறுத்தப்பட்ட...

பாலஸ்தீனம் பற்றிய விவாதத்தில் ஆஸ்திரேலியா

பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு குறித்து அவுஸ்திரேலியா இன்னும் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில்...

உக்ரைன்-ரஷ்யா போரில் 08 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இலங்கையின் 8 போர்வீரர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த போர்வீரர்களில் ஆறு பேர் ரஷ்யாவிலும் இருவர்...

இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை

இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்து பயன் திட்டம் தொடர்பான இரண்டு மருந்துகளின் விலை அரசால் குறைக்கப்பட்டுள்ளது. விலைக்...

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் ஊதிய உயர்வு

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் 9 வீத ஊதிய உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய தொழிற்சங்கம் பெண் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் ஒன்பது சதவீத...

சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிவிப்பு

ஏர் வனுவாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள் இன்றும் நாளையும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என பிரிஸ்பேன்...