Newsநாசாவில் மின்தடையால் விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு

நாசாவில் மின்தடையால் விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு

-

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று (25) திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாசாவில் ஏற்பட்ட தடை குறித்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது.

முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளது.

இயற்கை பேரழிவு எற்பட்டால் மாற்று ஏற்பாட்டிற்காக ஹூஸ்டனில் இருந்து சில மைல் தூரத்தில் மாற்று கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து பராமரித்து வருகிறது.

ஆனால் தற்போது விளக்குகள் மற்றும் ஏ.சி. வேலை செய்ததால் நாசா மையத்தில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளது.

இது குறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் தெரிவிக்கையில்,

”விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டி வருகிறது.

இதற்கான விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளன. அவர்கள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Latest news

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BTS இன் மெகா நிகழ்ச்சி

K-pop சூப்பர் குழுவான BTS, எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் 79 நிகழ்ச்சிகள் கொண்ட ஒரு பெரிய உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள்

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் முழுவதும் "குறிப்பிடத்தக்க" போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கிறது. இது 55 மீட்டர் நீளமும் 4.5 மீட்டர் அகலமும்...