Newsவெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

வெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

-

சீனாவின் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்த நிலையில், உளவு பார்த்ததாக கூறி தைவான் தொழிலதிபர் ஒருவர் அனுபவித்த கொடூர சித்திரவதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2019ல் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்ததாக கூறி தைவான் தொழிலதிபரான லீ மெங்-சு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது உளவு பார்த்தல் மற்றும் அரச இரகசியங்களை திருடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர், ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2021 ஜூலை மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, சீனாவில் இருந்து வெளியேற அதிகாரிகள் தரப்பு அவரை அனுமதிக்கவில்லை.

குற்றம் செய்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்றால், இனி சீனாவுக்கு நுழைய முடியாதபடி தடை செய்து விட்டு, வெளியேற்றுவார்கள். ஆனால் லீ மெங்-சு தைவான் நாட்டவர் என்பதால் சீன அதிகாரிகள் அரசியல் கோணத்தில் இந்த வழக்கை அணுகியுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...