Newsவெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

வெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

-

சீனாவின் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்த நிலையில், உளவு பார்த்ததாக கூறி தைவான் தொழிலதிபர் ஒருவர் அனுபவித்த கொடூர சித்திரவதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2019ல் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்ததாக கூறி தைவான் தொழிலதிபரான லீ மெங்-சு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது உளவு பார்த்தல் மற்றும் அரச இரகசியங்களை திருடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர், ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2021 ஜூலை மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, சீனாவில் இருந்து வெளியேற அதிகாரிகள் தரப்பு அவரை அனுமதிக்கவில்லை.

குற்றம் செய்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்றால், இனி சீனாவுக்கு நுழைய முடியாதபடி தடை செய்து விட்டு, வெளியேற்றுவார்கள். ஆனால் லீ மெங்-சு தைவான் நாட்டவர் என்பதால் சீன அதிகாரிகள் அரசியல் கோணத்தில் இந்த வழக்கை அணுகியுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...