Newsவெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

வெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

-

சீனாவின் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்த நிலையில், உளவு பார்த்ததாக கூறி தைவான் தொழிலதிபர் ஒருவர் அனுபவித்த கொடூர சித்திரவதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2019ல் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்ததாக கூறி தைவான் தொழிலதிபரான லீ மெங்-சு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது உளவு பார்த்தல் மற்றும் அரச இரகசியங்களை திருடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர், ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2021 ஜூலை மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, சீனாவில் இருந்து வெளியேற அதிகாரிகள் தரப்பு அவரை அனுமதிக்கவில்லை.

குற்றம் செய்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்றால், இனி சீனாவுக்கு நுழைய முடியாதபடி தடை செய்து விட்டு, வெளியேற்றுவார்கள். ஆனால் லீ மெங்-சு தைவான் நாட்டவர் என்பதால் சீன அதிகாரிகள் அரசியல் கோணத்தில் இந்த வழக்கை அணுகியுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...