News20 நிமிடங்களில் நான்கு போத்தல் தண்ணீர் குடித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

20 நிமிடங்களில் நான்கு போத்தல் தண்ணீர் குடித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

-

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மக்கள் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

45 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் அல்லது மாலை வெயில் குறைந்த பிறகு விளையாடுகின்றனர்.

தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இனி வரும் நாள்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 மில்லிலீற்றர் தண்ணீரை- அதாவது 4 போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் தெரிவிக்கையில்,

வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை குடித்துள்ளார். 20 நிமிடங்களில் சுமார் 2 லீற்றர் தண்ணீர் குடித்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு நிலைமை மோசமானது. பின்னர் அவர் உயிரிழந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் பிளேக் ப்ரோபெர்க் தெரிவிக்கையில்,

இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள்.

உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம் என தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

நோயாளியின் மரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள பெரிக்கி மருத்துவமனை

விக்டோரியாவின் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநரான மோனாஷ் ஹெல்த் மருத்துவமனை குழுமத்தின் ஒரு பகுதியான பெரிக்கில் உள்ள மோனாஷ் ஹெல்த் கேசி மருத்துவமனைக்கு $160,000 அபராதம்...

புற்றுநோய் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ள புதிய தகவல்

புற்றுநோய் உருவாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இரத்தத்தில் மாற்றம் ஏற்படுவதாக சமீபத்திய புற்றுநோய் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. புற்றுநோயுடன் தொடர்புடைய ரத்தத்தில் உருவாகும் புரதத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே...

எமிரேட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள சாதனை போனஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது. துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும்...

விக்டோரியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்த ஆய்வு

ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளின் பொருளாதார செயல்திறன் குறியீட்டில் விக்டோரியா முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, விக்டோரியா மாநிலம் குறியீட்டில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது மற்றும் தொடர்புடைய குறியீட்டை...

ஆஸ்திரேலியாவில் மாறுபடும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது மற்றும் வேலையின்மை கடந்த...

ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட சுகாதார தரவு ஆபத்தில் உள்ளதா?

இ-ப்ரிஸ்கிரிப்ஷன்களை விநியோகிக்கும் MediSecure, மக்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இந்த சேவையை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட சுகாதார தரவுகளுக்கு ஆபத்து...