அவுஸ்திரேலியா முழுவதையும் ஒரு வாரமாக நடத்தப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் 150க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஃபெடரல் போலீஸ் – மாநில போலீஸ் – வரி அலுவலகம் – எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வுக் குழு உள்ளிட்ட பல துறைகள் இதில் ஈடுபட்டன.
ஜூலை 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொடரில் 159 சந்தேக நபர்களும், 43 துப்பாக்கிகளும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களுக்கு எதிராக 693 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட உள்ளன.
அவர்களிடம் இருந்து 02 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள், கார்கள் மற்றும் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.