இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் துணைநடிகையாக நடித்து பிரபலமான நடிகை சிந்து மார்பக புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து கடந்த சில ஆண்டுகளாகவே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தலைகாட்டிய சிந்து சில படங்களில் நடித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே வறுமையில் வாடி வந்த சிந்துவுக்கு வாழ்வில் ஏகப்பட்ட கொடுமைகளும், வலிகளும், சோகங்கள் மட்டுமே நிறைந்துள்ளன.
சிறுமியாக இருக்கும் போதே சிந்துவுக்கு 14 வயதிலேயே அவரது வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அதே ஆண்டு ஒரு குழந்தையையும் பெற்று விட்ட நடிகை சிந்து கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீண்டும் அப்பா வீட்டுக்கே வந்து விட்ட சோகமும் தனது குழந்தையை காப்பாற்ற போராடியதையும் சமீபத்திய வலி நிறைந்த பேட்டிகளில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
