Cinemaபண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

பண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

-

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலாஜி கபா என்பவர், மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைபாடு ஒன்று கொடுத்திருந்தார்.

அதில், லிப்ரா புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்ற சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அறிமுகம் தனக்கு 2020 ஆம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரவீந்தர்இ நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் அந்த திட்டத்தில் 200 கோடி வரை முதலீடு செய்தால் இரட்டிப்பாக இலாபம் பார்க்கலாம் என தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களை தன்னிடம் அவர் காண்பித்ததாகவும் பாலாஜி கபா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் காண்பித்த ஆவணங்களை நம்பி தான் அத்திட்டத்தில் 16 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், கூறியபடி அந்த திட்டம் தொடங்க படாததால் தன் பணத்தை அவர் திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரவீந்தர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தன் முறைபாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...