Cinemaபண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

பண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

-

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலாஜி கபா என்பவர், மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைபாடு ஒன்று கொடுத்திருந்தார்.

அதில், லிப்ரா புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்ற சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அறிமுகம் தனக்கு 2020 ஆம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரவீந்தர்இ நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் அந்த திட்டத்தில் 200 கோடி வரை முதலீடு செய்தால் இரட்டிப்பாக இலாபம் பார்க்கலாம் என தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களை தன்னிடம் அவர் காண்பித்ததாகவும் பாலாஜி கபா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் காண்பித்த ஆவணங்களை நம்பி தான் அத்திட்டத்தில் 16 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், கூறியபடி அந்த திட்டம் தொடங்க படாததால் தன் பணத்தை அவர் திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரவீந்தர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தன் முறைபாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவை கடுமையாக தாக்கிய புயல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் நேற்று இரவு ஒரு சூறாவளி வகை 4 அமைப்பாக தீவிரமடைந்தது. கடுமையான வெப்பமண்டல சூறாவளி எரோல் இன்று காலை ப்ரூமிலிருந்து வடமேற்கே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள தங்க உற்பத்தி

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் தங்க உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக ஆஸ்திரேலியா இன்னும் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...