Newsஅடுத்த வேளை சாப்பிடுவோமா என்பதே 70 கோடி பேருக்கு தெரியாது -...

அடுத்த வேளை சாப்பிடுவோமா என்பதே 70 கோடி பேருக்கு தெரியாது – ஐ.நா அறிக்கை

-

உலகளவில், பசி, பட்டினி காரணமாக, சுமார் 70 கோடி பேருக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் அல்லது அடுத்த வேளை உணவை சாப்பிடுவோமா என்பதே தெரியாது என ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக உணவு திட்ட செயற்திட்ட பணிப்பாளர் இயக்குநர் சிண்டி மெக்கெய்ன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பேசுகையில் கூறியதாவது ,

நிதிப்பற்றாக்குறை காரணமாக, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள் குறைக்கப்படுகின்றன. மேலும் இது அதிகரித்துக்கொண்டே போகிறது.

நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது, தொடர்ச்சியான மற்றும் நீண்ட கால நெருக்கடிகளால், உலகளாவிய மனிதாபிமானத் தேவைகளைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

இது மனிதாபிமான சமூகத்தின் புதிய யதார்த்தம் – நமது புதிய இயல்பு – மேலும் பல ஆண்டுகளாக இதுபோன்ற வீழ்ச்சியை கையாண்டுவருகிறோம் என்றார்.

மேலும், ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று , 79 நாடுகளில் உலக உணவு திட்டத்தின் கீழ் நடத்திய மதிப்பீட்டின்படி, 78.3 கோடி மக்கள் – உலக மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவர் – இன்னும் ஒவ்வொரு இரவும் பசியுடன் தான் உறங்கச் செல்கிறார்கள். இந்த ஆண்டு 34.5 கோடிக்கும் அதிகமான மக்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், இது கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 கோடி மக்களாக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது, ஆண்டுதோறும் அதிகரிக்க, போர், பொருளாதார பாதிப்பு, பருவநிலை பாதிப்பு உள்ளிட்டவையும் பெரும்பங்காற்றுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...