Newsஅடுத்த வேளை சாப்பிடுவோமா என்பதே 70 கோடி பேருக்கு தெரியாது -...

அடுத்த வேளை சாப்பிடுவோமா என்பதே 70 கோடி பேருக்கு தெரியாது – ஐ.நா அறிக்கை

-

உலகளவில், பசி, பட்டினி காரணமாக, சுமார் 70 கோடி பேருக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் அல்லது அடுத்த வேளை உணவை சாப்பிடுவோமா என்பதே தெரியாது என ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக உணவு திட்ட செயற்திட்ட பணிப்பாளர் இயக்குநர் சிண்டி மெக்கெய்ன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பேசுகையில் கூறியதாவது ,

நிதிப்பற்றாக்குறை காரணமாக, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள் குறைக்கப்படுகின்றன. மேலும் இது அதிகரித்துக்கொண்டே போகிறது.

நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது, தொடர்ச்சியான மற்றும் நீண்ட கால நெருக்கடிகளால், உலகளாவிய மனிதாபிமானத் தேவைகளைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

இது மனிதாபிமான சமூகத்தின் புதிய யதார்த்தம் – நமது புதிய இயல்பு – மேலும் பல ஆண்டுகளாக இதுபோன்ற வீழ்ச்சியை கையாண்டுவருகிறோம் என்றார்.

மேலும், ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று , 79 நாடுகளில் உலக உணவு திட்டத்தின் கீழ் நடத்திய மதிப்பீட்டின்படி, 78.3 கோடி மக்கள் – உலக மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவர் – இன்னும் ஒவ்வொரு இரவும் பசியுடன் தான் உறங்கச் செல்கிறார்கள். இந்த ஆண்டு 34.5 கோடிக்கும் அதிகமான மக்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், இது கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 கோடி மக்களாக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது, ஆண்டுதோறும் அதிகரிக்க, போர், பொருளாதார பாதிப்பு, பருவநிலை பாதிப்பு உள்ளிட்டவையும் பெரும்பங்காற்றுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் – WA பள்ளியை முற்றுகையிட்ட போலீசார்

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பெர்த்தின் மிகப்பெரிய உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றை நேற்று போலீசார் முற்றுகையிட்டனர். Mount Lawley Senior உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஒரு டீனேஜரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ...

திடீரென விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானம் – பீதியடைந்த பயணிகள்

சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் செல்லும் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேபினில் அழுத்தம் குறைந்ததால், பயணிகள் பீதியடைந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஸ்கைநியூஸ்...