Cinemaகதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

கதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

-

பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார்.

இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது.

சீக்கிய பேரரசின் கடைசி அரசரான மஹாராஜா துலீப் சிங்கின் மகள் சோபியா துலீப் சிங் வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் வாழும் படித்த புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது.

பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் இந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கதீஜா ரஹ்மான் பேசும்போது, “லயனஸ் படத்தில் வேலை செய்வதை கெளரவமாகவும் அதே நேரம் சுவாரசியமாகவும் உணர்கிறேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டது முதலே இதனோடு பிணைக்கப்பட்டுவிட்டேன். இளவரசி சோபியாவின் போராட்டத்துக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைப்பதே எங்களின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

2020-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்த ஃபரிஷ்தா என்கிற பாடலை கதீஜா பாடினார். அதன் பிறகு இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், பாடகர் அறிவு ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய கதீஜா, தமிழில் இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நன்றி தமிழன்

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...