Newsபயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

-

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை வைத்திருக்கும் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன், தற்போது, பெரியம்மை, ஆந்தராக்ஸ் முதலான கொடிய நோய்களைப் பரப்பக்கூடியவகையில், கிருமி ஸ்பிரே மற்றும் நச்சுப் பேனாக்களையும் உருவாக்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகள் ஆயுத சட்ட திட்டங்களை ஒழுங்காக பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அமெரிக்க அரசுத்துறையின் நிபுணர்கள் பலர், இந்த உயிரியல் ஆயுதங்கள் அணு ஆயுதங்களைவிட பயங்கரமானவையாக இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்கள்.

ஏற்கனவே வட கொரியா தன்னிடம் உயிரியல் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், தொடர்ந்து உருவாக்கிவருவதாகவும், கோவிட் காலகட்டத்தில் கூட, நிலவிய பயங்கர சூழலை பயன்படுத்திக்கொண்டு உயிரியல் ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டிருக்கக்கூடும் என்றும் போர் ஏற்படும் நிலையில், அணு ஆயுதங்களை விட வட கொரியா உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தத்தான் அதிக வாய்ப்புள்ளது என்றும் அணு ஆயுத நிபுணர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...