Sydneyதிருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

-

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் உலக நாடுகள் பலவற்றில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மதியம் 3.45 மணியளவில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தத் துவங்கியுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கோடீஸ்வர குடும்பம் ஒன்றைச் சேர்ந்த Dawn Singleton என்னும் இளம்பெண். அவரும் அவரைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த Ashley Wildeyயும், திருமணத்துக்காக அழைப்பிதழ்கள் விநியோகிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

Dawn உடைய திருமண உடை கூட தயாராகிவிட்ட நிலையில், பொலிசாராக பணியாற்றும் Ashleyக்கு சிட்னி மால் ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் கிடைக்க, உடனடியாக அங்கு ஓடியிருக்கிறார்.

பிறகுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது, கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களில், தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த Dawnம் ஒருவர் என்பது.

நிலைகுலைந்துபோன Ashleyயை சக பொலிசார் தேற்றமுடியாமல் திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்தில், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர், சீனப்பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு ஒன்பது மாதக் குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...