Sydneyதிருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

-

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் உலக நாடுகள் பலவற்றில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மதியம் 3.45 மணியளவில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தத் துவங்கியுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கோடீஸ்வர குடும்பம் ஒன்றைச் சேர்ந்த Dawn Singleton என்னும் இளம்பெண். அவரும் அவரைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த Ashley Wildeyயும், திருமணத்துக்காக அழைப்பிதழ்கள் விநியோகிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

Dawn உடைய திருமண உடை கூட தயாராகிவிட்ட நிலையில், பொலிசாராக பணியாற்றும் Ashleyக்கு சிட்னி மால் ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் கிடைக்க, உடனடியாக அங்கு ஓடியிருக்கிறார்.

பிறகுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது, கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களில், தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த Dawnம் ஒருவர் என்பது.

நிலைகுலைந்துபோன Ashleyயை சக பொலிசார் தேற்றமுடியாமல் திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்தில், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர், சீனப்பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு ஒன்பது மாதக் குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...