Sydneyதிருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

-

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் உலக நாடுகள் பலவற்றில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மதியம் 3.45 மணியளவில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தத் துவங்கியுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கோடீஸ்வர குடும்பம் ஒன்றைச் சேர்ந்த Dawn Singleton என்னும் இளம்பெண். அவரும் அவரைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த Ashley Wildeyயும், திருமணத்துக்காக அழைப்பிதழ்கள் விநியோகிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

Dawn உடைய திருமண உடை கூட தயாராகிவிட்ட நிலையில், பொலிசாராக பணியாற்றும் Ashleyக்கு சிட்னி மால் ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் கிடைக்க, உடனடியாக அங்கு ஓடியிருக்கிறார்.

பிறகுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது, கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களில், தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த Dawnம் ஒருவர் என்பது.

நிலைகுலைந்துபோன Ashleyயை சக பொலிசார் தேற்றமுடியாமல் திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்தில், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர், சீனப்பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு ஒன்பது மாதக் குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...