Newsபசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகாப்டர்கள்

பசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகாப்டர்கள்

-

பசிபிக் பெருங்கடலில் இரவு பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் டோக்கியோவில் இருந்து 600 கிலோமீட்டர் தெற்கே உள்ள தீவுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.

அதனைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் வேறு எந்த விமானங்களோ, கப்பல்களோ இல்லாததால், இந்தச் சம்பவத்தில் வேறொரு நாடு ஈடுபட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்தவர்களில், தற்காப்புப் படைகளின் மூத்த தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யூச்சி சகாமோட்டோவும் இருந்தார்.

விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...