Sportsபோராடித் தோற்றது மும்பை - IPL 2024

போராடித் தோற்றது மும்பை – IPL 2024

-

17 வது ஐ.பி.எல். தொடரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி முதலாவது போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்களாக ஜேக் பிரேசர் மெக்கர்க் – அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் தொடக்கம் முதல் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார் வெறும் 15 பந்துகளில் அவர் அரைசதம் விளாசி அசத்தினார். அரைசதம் கடந்த பிறகும் அதிரடியை விடாமல் மும்பை அணியின் பந்துவீச்சை ஜேக் பிரேசர் துவம்சம் செய்தார்.

தொடர்ந்து ஆடிய அவர் 27 பந்துகளில் 84 ஓட்டங்கள் (11 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய அபிஷேக் போரல் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 17 பந்துகளில் 41 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ரிஷப் பண்ட் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டப்ஸ் 48 ஓட்டங்களும் , பண்ட் 29 ஓட்டங்களும், எடுத்தனர்.

தொடர்ந்து 258 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

அதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியுற்றது.

Latest news

மத்திய அரசின் பட்ஜெட்டில் புதிய நம்பிக்கை

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வீடுகள் கட்ட கூடுதல் முதலீடாக பல பில்லியன் டாலர்களை மத்திய அரசு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள்...

33 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு – கடற்படையினரால் கைது

சட்டவிரோத அகதிகள் என சந்தேகிக்கப்படும் 33 பேரை ஏற்றிச் சென்ற படகு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது. வியாழன் அதிகாலை மோசமான வானிலை காரணமாக புலம்பெயர்ந்த...

வெள்ளை ரொட்டி பாக்கெட்டுகளில் காணப்பட்ட எலியின் உடல் பாகங்கள்

சில ரொட்டிகளில் எலி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜப்பானிய உணவு நிறுவனம் ஒன்று, ஒரு பிரபலமான பிராண்டின் 100,000 க்கும் மேற்பட்ட துண்டுகளாக்கப்பட்ட வெள்ளை ரொட்டி...

குற்றவாளிகளை கைது செய்யும் போது இருமுறை யோசிக்குமாறு குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு அறிவிப்பு

குற்றவாளிகளை கைது செய்யும் போது மறுபரிசீலனை செய்யுமாறு குயின்ஸ்லாந்து காவல்துறை தனது அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக பிரிஸ்பேன் கண்காணிப்பு இல்லத்தில் குழாய் உடைந்ததன் காரணமாக சந்தேக நபர்களை...

வெள்ளை ரொட்டி பாக்கெட்டுகளில் காணப்பட்ட எலியின் உடல் பாகங்கள்

சில ரொட்டிகளில் எலி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜப்பானிய உணவு நிறுவனம் ஒன்று, ஒரு பிரபலமான பிராண்டின் 100,000 க்கும் மேற்பட்ட துண்டுகளாக்கப்பட்ட வெள்ளை ரொட்டி...

குற்றவாளிகளை கைது செய்யும் போது இருமுறை யோசிக்குமாறு குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு அறிவிப்பு

குற்றவாளிகளை கைது செய்யும் போது மறுபரிசீலனை செய்யுமாறு குயின்ஸ்லாந்து காவல்துறை தனது அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக பிரிஸ்பேன் கண்காணிப்பு இல்லத்தில் குழாய் உடைந்ததன் காரணமாக சந்தேக நபர்களை...