Newsஇங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

-

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் .

இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த ஆய்வில், ரோமானிய காலகட்டத்தைச் சேர்ந்த குளியல் அறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது அபூர்வ ஊதா நிறப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானிய நிலவியல் அமைப்புடன் இணைந்து பல்வேறு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பொருள், டைரியன் ஊதா (Tyrian Purple) என கண்டறியப்பட்டது. இந்த டைரியன் ஊதா, ரோமானியப் பேரரசின் ஏகாதிபத்திய நீதிமன்றத்துடன் தொடர்புடைய நிறமாகும்.

இந்த நிறமியானது மத்திய தரைக்கடல், வட ஆப்பிரிக்கா மற்றும் மொராக்கோவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதை தயாரிப்பது மிகவும் கடினம் என்பதால், அந்த காலகட்டத்தில் இந்த டைரியன் ஊதா, தங்கத்தை விட அதிக மதிப்புடையதாக இருந்துள்ளது.

இது ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பு என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், இந்த அரிய நிறமி, எகிப்தின் ரோமானிய மாகாணத்திலுள்ள சுவர் ஓவியங்களிலும், சில உயர் அந்தஸ்துகொண்டோரின் சவப்பெட்டிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்.

Latest news

ஊழியர்களுக்கு சாதனை போனஸ் வழங்கிய மற்றொரு விமான நிறுவனம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் அடைந்த சாதனை லாபத்திற்குப் பிறகு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு சம்பளத்திற்கு...

கானாவில் “இளைய கலைஞர்” கின்னஸ் உலக சாதனை படைத்த சிறுவன்

கானாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், இளைய கலைஞன் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளான். ஏஸ் லியாம் என்ற ஒரு வயதுக் குழந்தை 6 மாதங்களாக ஓவியம்...

வாடிக்கையாளர்களுக்கு லட்சக்கணக்கான குறுஞ்செய்திகளை அனுப்பியதால் பீட்சா நிறுவனத்திற்கு அபராதம்

உலகம் முழுவதும் பிரபலமான பீட்சா ஹட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 2.5 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் பீட்சாக்கள் குறித்த குறுஞ்செய்திகளை...

நோயாளியின் மரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள பெரிக்கி மருத்துவமனை

விக்டோரியாவின் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநரான மோனாஷ் ஹெல்த் மருத்துவமனை குழுமத்தின் ஒரு பகுதியான பெரிக்கில் உள்ள மோனாஷ் ஹெல்த் கேசி மருத்துவமனைக்கு $160,000 அபராதம்...

நோயாளியின் மரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள பெரிக்கி மருத்துவமனை

விக்டோரியாவின் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநரான மோனாஷ் ஹெல்த் மருத்துவமனை குழுமத்தின் ஒரு பகுதியான பெரிக்கில் உள்ள மோனாஷ் ஹெல்த் கேசி மருத்துவமனைக்கு $160,000 அபராதம்...

புற்றுநோய் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ள புதிய தகவல்

புற்றுநோய் உருவாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இரத்தத்தில் மாற்றம் ஏற்படுவதாக சமீபத்திய புற்றுநோய் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. புற்றுநோயுடன் தொடர்புடைய ரத்தத்தில் உருவாகும் புரதத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே...