Newsஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு - இலங்கையர்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு – இலங்கையர்களுக்கு சிக்கல்

-

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்தால் படகு வருகைகள் அதிகரிக்கும் என்றோம், அது தான் நடந்து கொண்டிருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஆட்கடத்தல்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். (தொழிற்கட்சி ஆட்சி வந்தால்) இதுதான் நடக்கும் என்று கூறினோம், அது நடந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறியிருக்கிறார்.

“சட்டவிரோத படகு வருகைகளை எவ்வாறு நிர்வகிக்க போகிறது என அல்பனீஸ் (தொழிற்கட்சி) அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்,” என முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது.

இந்த கொள்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியர்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு மருந்து பற்றி எச்சரிக்கை.

Paracetamol மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்திய பின்னர், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவசர சிகிச்சைப்...

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரும் Reddy Express

நாடு முழுவதும் உள்ள Reddy Express கடைகளில் ஷாப்பிங் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், தொழில்நுட்பக் கோளாறால் சிலரிடம் 100 முறைக்கு...

Cryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

Cryptocurrency ATMகளுடன் தொடர்புடைய மோசடிகள் மூலம் மக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு நேற்று கடுமையான...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...

அவசர அழைப்பு சேவையை சீர்குலைத்ததற்காக Telstraவுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வழங்குநர், 2024 ஆம் ஆண்டில் மென்பொருள் மேம்படுத்தலின் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவசர சேவையை வழங்கத் தவறிவிட்டார் என்று ACMA...

நச்சுப் பாசியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆஸ்திரேலிய நீர்நிலை

தெற்கு ஆஸ்திரேலியாவின் நீர்நிலைகளில் ஒன்றான Coorong தற்போது நச்சுப் பாசிப் பூப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. Coorongல் மீன்கள் மற்றும் புழுக்கள் உட்பட இறந்த கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, மீளமுடியாத சுற்றுச்சூழல்...