Newsஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

-

சிட்டினியில் வெளிநாட்டு மாணவர்கள் ஒன்பது பேர் சிட்னி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசாங்க ஏஜென்ஸிகளிலிருந்து அழைப்பெடுப்பவர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு மாணவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு சிட்னியில் நடந்த பொலிஸ் நடவடிக்கையில் மேலும் எட்டுப்பேர் சிக்கியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாமதேயத் தொலைபேசி அழைப்புக்களின் மூலம் சுமார் 24 லட்சம் டொலர் பணத்தை மோசடி செய்து, பல்வேறு வங்கிக்கணக்குகளின் ஊடாக வெளிநாட்டுக்குக் கடத்தியிருப்பதாக இவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இந்த குற்ற வலையமைப்பில் மேலும் பலர் கைதாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் அவதானமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...