Newsஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

-

சிட்டினியில் வெளிநாட்டு மாணவர்கள் ஒன்பது பேர் சிட்னி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசாங்க ஏஜென்ஸிகளிலிருந்து அழைப்பெடுப்பவர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு மாணவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு சிட்னியில் நடந்த பொலிஸ் நடவடிக்கையில் மேலும் எட்டுப்பேர் சிக்கியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாமதேயத் தொலைபேசி அழைப்புக்களின் மூலம் சுமார் 24 லட்சம் டொலர் பணத்தை மோசடி செய்து, பல்வேறு வங்கிக்கணக்குகளின் ஊடாக வெளிநாட்டுக்குக் கடத்தியிருப்பதாக இவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இந்த குற்ற வலையமைப்பில் மேலும் பலர் கைதாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் அவதானமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...