Cinemaபண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

பண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

-

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலாஜி கபா என்பவர், மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைபாடு ஒன்று கொடுத்திருந்தார்.

அதில், லிப்ரா புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்ற சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அறிமுகம் தனக்கு 2020 ஆம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரவீந்தர்இ நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் அந்த திட்டத்தில் 200 கோடி வரை முதலீடு செய்தால் இரட்டிப்பாக இலாபம் பார்க்கலாம் என தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களை தன்னிடம் அவர் காண்பித்ததாகவும் பாலாஜி கபா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் காண்பித்த ஆவணங்களை நம்பி தான் அத்திட்டத்தில் 16 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், கூறியபடி அந்த திட்டம் தொடங்க படாததால் தன் பணத்தை அவர் திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரவீந்தர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தன் முறைபாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...