Newsதிரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

திரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட ஏராளமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் உற்பத்தி குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

வாகனத்தின் பின்பகுதியில் உள்ள பல்ப் பாதுகாப்பற்றதாகவும், தண்ணீர் கசிவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்களை திரும்ப பெற நிறுவன நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தண்ணீர் கசிவால், பல்பின் வெளிச்சம் குறைந்து, உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2022 முதல் தயாரிக்கப்பட்ட 465 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அடங்கிய பட்டியல் லேண்ட் ரோவர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் லேண்ட் ரோவர் டீலர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வாகனங்களில் பல்புகளை இலவசமாக சரி செய்து கொள்ளலாம்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...