Newsஇலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை தடுத்த கடற்படையினர்!

இலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை தடுத்த கடற்படையினர்!

-

ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக கூறப்படும் 77 பேர் மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் இயந்திரப்படகில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்து கைப்பற்றினர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததை அடுத்து 77 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தைப் பாதித்த வானிலை சீற்றங்கள்

அரசாங்கம் மீதான குறைந்த ஆதரவு மற்றும் பாதகமான வானிலை விளைவுகள் காரணமாக ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் சிறிதளவு வளர்ச்சியை மட்டுமே காண்பிக்கும் என்று புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஜப்பானில் வீடொன்றில் இறந்துகிடந்த நூற்றுக்கணக்கான பூனைகள்

தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்கு நலக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அசுத்தமான வீட்டில் சுமார் நூறு இறந்த பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி...