Newsஇலங்கையில் முட்டாள்கள் தேர்ந்தெடுத்த அறிவாளிகள்

இலங்கையில் முட்டாள்கள் தேர்ந்தெடுத்த அறிவாளிகள்

-

இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாளை தேர்ந்தெடுக்கிறார்கள்! அதற்கு முதல் இன்றைய இந்த அரசியல் பொருளாதார சமூக நெருக்கடி நிலைக்கு காரணமான பழைய ஆட்சிகளையும் ஒருமுறை அலசிவிட்டு வரலாம் என்ற அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது!

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் கிட்டத்தட்ட 83% காலப்பகுதியை பண்டாரநாயக்க குடும்பம், சேனாநாயக்க குடும்பம், மகிந்ந ராஜபக்ச குடும்பம் ஆகியவை இலங்கை சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய பெயர்களில் ஆண்டுவந்திருக்கிறார்கள்!

இதுவரை இலங்கை அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள் இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்தவர்களாகவும் அல்லது இந்த மூன்று கட்சிக்குள்ளும் தாவித்திரிபவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள்!

இன்று மக்களும் நாடும் வந்திருக்கும் வங்குரோத்து நிலைக்கு இந்த மூன்று கட்சிகளின் பங்கும் இன்றியமையாதது என்பதை இணைப்பில் உள்ள சில தரவுளுடன் சற்று புரிய வைக்க முயல்கிறேன். மேற்படி தரவுகளை சமூகத்துக்கு தந்துதவிய பேராசிரியர்கள் சிசிர ஜெயசூரிய, சந்தன ஆகியோருக்கும் கலாநிதி குணதிலகவுக்கும் நன்றி! இதுவரை காலமும் சிங்கள பௌத்த தேசியவாதம் என்ற பெயரில் மொத்த அரசியலும் நடாத்தப்பட்டு வந்ததால் இவ்வளவு காலமும் ஆண்ட அல்லது மக்கள் தெரிந்துவிட்ட அரசியல்தலைமைகளின் அறிவற்ற அல்லது முட்டாள்த்தனமான பொருளாதார கோட்பாடுகளும் ஊழல்களும் பல சாதாரண மக்களுக்கு தெரியாமலே போய்விட்டது என்பது கசப்பான உண்மை.

1. 1965 முதல் நாங்கள் கிட்டத்தட்ட 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் பிச்சை எடுத்துள்ளோம்

(இணைப்பை பார்க்க)

2. 2004 வரை குறைந்த வட்டிக்கு கடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் கடன் பெற்றுவந்த இலங்கை அரசுகள் 2005 முதல்( மகிந்த அரசு 2005-2014, மைத்திரி-ரணில் நல்லாட்சி 2015-2019, கோத்தா-மகிந்த அரசு 2019-2022) ISB( International Servorgien bonds) மற்றும் வியாபார கடன்களை( commercial loans) அதிக வட்டிக்கு வாங்கி குவித்துள்ளன. தவிர வாங்கப்பட்ட கடன்களும் திட்டமிடப்பட்ட/ விரைவில் இலாபமீட்டக்கூடிய திட்டங்களில் முதலிடப்படாமல் அரசியல் சார் திட்டங்களுக்கும், இலகுவாக ஊழல் செய்யக்கூடிய திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதன் விளைவு இன்று கடன் கழுத்தை நெரித்து நொடித்துப்போனதாக அறிவித்து உலக அரங்கில் மொத்த நாட்டின் மானத்தையும் இந்த அரசுகள் வாங்கியுள்ளன.

(இணைப்பை பார்க்க)

3. இலங்கையின் தனியார் துறையே எப்போதும் நாட்டின் பொருளாதாரத்தை நேர்மறையாக வைத்திருக்க போராடிக்கொண்டிருக்க அரச துறைகள் தொடர்ச்சியாக நட்டத்திலேயை இயங்கி வந்துள்ளன. கடந்த கால அரசுகள் அரசியல் இருப்புக்காக அவற்றை இலாபகரமாக மாற்றவில்லை அல்லது மாற்ற முடியவில்லை. இதற்கு பல தொழிற்சங்கங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் JVP. உம் முக்கிய காரணம். ஏதாவது கடினமான நடவடிக்கைகளில் அரசு இறங்கினால் தொழிற்சங்க நடவடிக்கை என்றபெயரில் தடுத்து அரச நிறுவனங்களை தொடர்ந்து நட்டத்தில் வைத்திருக்க பலகாலமாக உதவியிருக்கிறது. ஓட்டு அரசியலுக்காக அரசியல்வாதிகளும் தொடர்ந்து அரச நிறுவனங்களை நட்டத்தில் இயங்க அனுமதித்து ஊழலில் குளிர்காய்ந்து வந்ததன் விளைவை ஒட்டு மொத்த நாடும் இன்று அனுபவிக்கிறது.

( இணைப்பை பார்க்க)

இந்த நிலையில் நாளை புதிய ஜனாதிபதி தேர்வுக்கு வருவோம்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாசாவின் SJB அணி, இலங்கை சுதந்திரகட்சியில் இருந்து பிரிந்த பொதுஜன பெரமுனவின் டலஸ் தலைமையிலான அணியை ஆதரிக்கிறது. மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சி அணியை சுதந்திரகட்சியில் இருந்து பிரிந்த பொதுஜன பெரமுனவின் தினேஸ் குணவர்த்தன அணி ஆதரிக்கிறது.

இதில் யாரோ ஒருவர் வெல்லப்போகிறார். வென்ற அணிக்கு மீதமுள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இணைந்து அமைச்சு பதவிகளை எடுப்பர்.

இந்த வீணாப்போன அரசியல்வாதிகளுக்காக பலகட்சிகள், பல கொள்கைகள் என்று பிரிந்து பிரிந்து கடந்த 74 வருசமாக வாக்களிக்கும் மக்களின் தலைவிதியை என்னவென்று சொல்வது???

இந்த அடிப்படையில் பௌத்த சிங்கள பேரினவாதமோ, மக்களோ பொருளாதார ரீதியாக ஒரு போதும் உருப்படப்போவதில்லை!

கடந்த வாரம் ஜனாதிபதி தகுதியுடையோர் பற்றிய அறிவியல் ஒப்பீடு ஒன்றை சிங்கள நண்பர் ஒருவர் செய்திருந்தார். இணைத்துள்ளேன். அதை பார்க்கும் போதே இவர்களின் பொருத்தப்பாடுகள் தெரியும். இவ்வாறான அறிவியல் அணுகுமுறைகள் எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதிநிதியின் தெரிவிலும் வராதவரை நாடு உருப்படப்போவதில்லை!

அதனால் தான் தமிழ்தேசியம் பேசும் தமிழ்கட்சிகள் மற்றும் வடக்கு -கிழக்குமாகாண தமிழ் முஸ்லீம் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சுயாதீனமான பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக கூறிவருகிறேன்.

நாட்டுக்குள் செய்யமுடியாவிட்டாலும் நாட்டுக்கு வெளியில் சுயாதீனமாக கட்டமைப்பை உருவாக்கி செய்யமுடியும். உள்நாட்டில் உற்பத்திப் பெருக்கத்திற்கான, வியாபார மற்றும் ஏற்றுமதி கட்டமைப்பை மட்டும் நடாத்திக்கொண்டு பணமூலத்திற்கான ஸ்திரமான கட்டமைப்பை வெளியே உருவாக்கலாம். உலகநாடுகளில் பல முஸ்லீம சமூகங்கள் அந்த அடிப்படையில் தான் இயங்குகின்றன. சேர்ந்து செய்ய முடியாவிட்டால் தனித்தனியாக செய்யலாம். பொருளாதார பலத்தை நாங்கள் நிரந்தரமாக கொண்டிருக்கும் வரை எண்ணிக்கையில் சிறுபான்மையான எந்த சமூகத்தையும் எந்த பேரினவாதத்தாலும் நசுக்கமுடியாது என்பதற்கு இஸ்ரேல் ஒரு நல்ல உதாரணம்!

ஆனால் போர்முடிந்து 13 வருடங்கள் ஆகியும் உள்ளூரில் ஒரு பொருளாதாரக்கட்டமைப்பையும் ஒற்றுமையாக உருவாக்க வக்கில்லாத தமிழ்தேசிய கட்சிகளுக்கும் தெற்கின் பௌத்த சிங்கள பேரினவாத கட்சிகளின் அரசியலுக்கும் பெரிய வேறுபாடுகள் ஒன்றுமில்லை!

தான்தோன்றியதாக உருவாகும் மக்கள் போராட்டங்களும் இறுதியில் ஏதோ ஒரு அரசியலால் சூறையாடப்படும்!

ஏனெனில் மக்களை தொடர்ந்து முட்டாள்களாகவே வைத்திருப்பதில் மட்டும் பல அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வென்றுவிடுகின்றனர்!

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்! இல்லையேல் நாளையை தலைமுறையின் விதிகளும் வீதிகளிள் எழுதப்படும்!

முட்டாள்கள் தேர்ந்தெடுக்கும் அறிவாளிகள், அறிவாளிகளானால் அது தற்செயலானது

நன்றி

திருநாவுக்கரசு தயந்தன்

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...

ஆஸ்திரேலியாவில் பணக்காரராக இருக்க உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை?

சராசரி ஆஸ்திரேலியர் பணக்காரர் ஆவதற்கு சுமார் $346,000 சம்பாதிக்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒரு நபரின் சராசரி வருமானம்...