Newsபயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

-

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை வைத்திருக்கும் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன், தற்போது, பெரியம்மை, ஆந்தராக்ஸ் முதலான கொடிய நோய்களைப் பரப்பக்கூடியவகையில், கிருமி ஸ்பிரே மற்றும் நச்சுப் பேனாக்களையும் உருவாக்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகள் ஆயுத சட்ட திட்டங்களை ஒழுங்காக பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அமெரிக்க அரசுத்துறையின் நிபுணர்கள் பலர், இந்த உயிரியல் ஆயுதங்கள் அணு ஆயுதங்களைவிட பயங்கரமானவையாக இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்கள்.

ஏற்கனவே வட கொரியா தன்னிடம் உயிரியல் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், தொடர்ந்து உருவாக்கிவருவதாகவும், கோவிட் காலகட்டத்தில் கூட, நிலவிய பயங்கர சூழலை பயன்படுத்திக்கொண்டு உயிரியல் ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டிருக்கக்கூடும் என்றும் போர் ஏற்படும் நிலையில், அணு ஆயுதங்களை விட வட கொரியா உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தத்தான் அதிக வாய்ப்புள்ளது என்றும் அணு ஆயுத நிபுணர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

சிறந்த விமானக் குழுவிற்கான முதல் இடம் ஆஸ்திரியாவுக்கு செல்கிறது

ஐரோப்பாவின் சிறந்த விமானக் குழு தரவரிசையில் ஆஸ்திரியாவின் விமானப் பணியாளர்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த தரவரிசை 2023 ஆம் ஆண்டிற்கான செய்யப்பட்டது மற்றும் ஏர் பிரான்ஸ்...

உங்கள் வீட்டில் கல்நார் இருந்தால் அவதானமாக இருங்கள்

நாட்டில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதில் கல்நார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு மூன்றாவது வீட்டிற்கும் கல்நார் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்நார் ஒழிப்பு கவுன்சிலின்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...