Newsஇணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

இணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

-

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைய மோசடிகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் இணக்கக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆஸ்திரேலிய தொடர்பு, ஊடக ஆணையமும் அதில் கையெழுத்திட்டதாக அவை வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.

இணக்கக் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் –

  • தகவல்களைப் பகிர்ந்துகொள்வது,
  • மோசடிகள், போலி அழைப்புகள், குறுந்தகவல் சேவைகள் தொடர்பான புலன்விசாரணைகளில் உதவுதல்
  • இவற்றின் தொடர்பில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணைந்து கண்டறிவது

போலித் தொலைபேசி அழைப்புகளும் மின்னியல் தகவல்களும் அனைத்துலகப் பிரச்சினையாக இருப்பது கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உலகளாவிய நிலையில் ஒருங்கிணைந்த முறையில் அத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தைச் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் புரிந்துகொண்டு செயல்பட முனைகின்றன. அதற்கு இணக்க ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...