Breaking Newsஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு – மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு, அவசர அறுவை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், அவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார்.

அவரை தேடும் வேட்டையை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.. இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டால் ஆஸ்திரேலியா அதிர்ந்து போய் இருக்கிறது.

ஏனென்றால் உலகிலேயே கடுமையான துப்பாக்கிச்சட்டங்கள் இருந்தும், இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுபற்றி பொலிஸ் தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் என தெரிவித்தார்.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...