Breaking Newsஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் - இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் – இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

-

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கையில் அவர்களது தாயார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் நிறைவேற்று தர பணியில் இருந்து ஓய்வு பெற்ற பெண் வீட்டில் தனியாக வசித்தார். அவரது பெரிய வீட்டின் அருகே ஏராளமான கடைகளை வாடகைக்கு வழங்கி வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் 2 மணியளவில் குறித்த பெண் வசித்த வீட்டில் இருந்து சுமார் ஐந்தடி உயரமுள்ள கறுப்பான நபர் ஒருவர் கத்தியுடன் வெளியில் வருவதைப் பார்த்ததாகவும், அவரது கை அறுபட்டு இரத்தம் கசிந்ததனையும் அவதானித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த நபர் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர் அருகில் செல்லவில்லை எனவும் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டமையினால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் பொலிஸாரிடம் தகவல் வழங்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றனர்

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...