Newsதுடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

-

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று ‘ஸ்டிரைக்கின்’ (Strychnine) என்று அவர் விவரித்தார். இப்படிப்பட்ட கொடூரமான் விஷத்தை ரஷ்யா பயன்படுத்த்தியதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக ஆபத்தான கொடிய விஷமான இது உடலில் புகுந்தால், லும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும். அப்போது விஷம் எடுத்துக் கொண்ட நபர் நீண்ட நெடு நேரம் வலியினால் துடிதுடித்து இறந்து போவார். இந்த விஷத்திற்கு ஸ்ட்ரைக்னைன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தூள் வடிவில் காணப்படும் இந்த விஷத்தை ரஷ்யா தனது எதிரிகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது

ரஷ்யா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி, லண்டனில் ஸ்டிரைக்னைன் போன்ற இரசாயனப் பொருளால் இறந்து கிடந்தார் என்று ‘டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்டிரைக்னைன் உட்கொண்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மனித உடலில் அதன் பயங்கரமான விளைவு காரணமாக, இந்த தீவிர இரசாயனம் இங்கிலாந்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

விஷம் நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி இது குறித்து கூறுகையில், ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், இது மிகவும் மெதுவாக செயல்படும் விஷம் இறக்க பல மணிநேரம் ஆகும். இது மிகவும் கொடுமையானது.

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் ஒரே நேரத்தில் சுருங் கினால் எப்படி இருக்கும் . நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா… உண்மையில் எலும்புகளிலிருந்து சதைகளை பிரிந்து செல்லும். உயிர் வேதியியல் மற்றும் மருத்துவ உயிர் வேதியியலில் பட்டம் பெற்ற டாக்டர் பிராட்பரி, இந்த விஷத்தை பற்றி ‘A Test for Poison: Eleven Deadly Substance and the Killer Who Used Them’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மனித உடலில் ஸ்ட்ரைக்னைனின் பயங்கரமான விளைவுகள் இருந்தபோதிலும், இது கடந்த காலத்தில் செயல்திறனை மேம்படுத்தும் மருந்தாகப் இது பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Latest news

300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளார் மன்னர் சார்ல்ஸ்

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய...

Al Jazeera அலுவலகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவு!

இஸ்ரேல் அதிகாரிகள் Al Jazeera அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை படையெடுத்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாடு போர்...

கிணற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள காணாமல் போன அவுஸ்திரேலிய சகோதரர்களின் சடலங்கள்

பல நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு அவுஸ்திரேலிய சகோதரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியின் சடலங்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. டிஎன்ஏ ஆதாரம் இல்லாமல்...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

T20க்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி

T20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள போட்டிக்கான போட்டி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியாவை...