Newsஅமெரிக்கா - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் - ஜெர்மனி...

அமெரிக்கா – ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் – ஜெர்மனி வழங்கவுள்ள ஆபத்தான ஆயுதம்

-

உக்ரைன் தன்னை தானே தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் நவீன உந்துகணை கட்டமைப்புக்களை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை விமர்சித்துள்ள ரஷ்யா, இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான நேரடி மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

நீண்ட தூரத்தில் இருந்து எதிரிப்படையை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர உந்துகணைகளை அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியிருந்தது.

எனினும் ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனும் அச்சம் காரணமாக அந்தக் கோரிக்கையை அமெரிக்கா நீண்டகாலமாக நிராகரித்துவந்திருந்தது.

இந்த நிலையில் மிகவும் நவீனமான உந்துகணை கட்டமைப்புக்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைனின் பேரம் பேசும் திறன் அதிகரிக்கும் என்பதுடன், இராஜதந்திர ரீதியான தீர்வுக்கான வழியை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த ஆயுத விநியோகம் நேரடியாகவும் திட்டமிட்ட வகையிலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ரஷ்ய அதிபர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ராடர் கண்காணிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உக்ரைனுக்கு விநியோகிக்க போவதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் தெரிவித்துள்ளார்.

கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி மற்றும் ஜேர்மனியின் எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜேர்மன் சான்ஷிலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய நவீன ஏவுகணையானது ஏனைய நேட்டோ நாடுகளுடன் இணைந்து ஜேர்மன் தயாரித்த ஒன்றென்பதுடன், புதிய ராடர் கட்டமைப்பு மூலம் எதிரிகளின் எறிகணை கட்டமைப்புக்களை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...