Newsஅதிரடி மாற்றங்களுடன் Twitter - Elon Musk அறிவிப்பு!

அதிரடி மாற்றங்களுடன் Twitter – Elon Musk அறிவிப்பு!

-

இந்த நவீன உலகில் அனைத்துமே இணையதளங்களிலேயே இடம்பெற்று வருகிறது. பொருட்கொள்வனவு முதல் அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர்.

இந்தநிலையில், எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சில ட்விட்டர் பதிவுகள் செய்துள்ளார்.

அதில், “ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஒடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்தநிலையில், எலான் மாஸ் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

ட்விட்டரில் நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும். ட்விட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும் என பட்டியலிட்டுள்ளார், அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் ட்வீட்களுக்கு இடையில் செல்ல வலது/இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யவும். இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

எனினும், நீண்ட பதிவுகளை வெளியிட அனுமதி வழங்கினால் அதனால் ட்விட்டருக்கு தனித்தன்மை என்பது இல்லாமல் போய் விடும் என பலர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஜப்பானுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கு கடுமையாகும் விதிகள்

ஜப்பானின் குடிவரவு சேவை நிறுவனம் சர்வதேச மாணவர்களை சேர்க்க கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர்களுக்காக...

அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ள ஆஸ்திரேலியா

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியா அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ளது. அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியாவில் சராசரி தனிநபர் வரி விகிதம் 2022-2023...

சவால்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் பதவியை எவ்வாறு வகித்தார் என ஸ்காட் மோரிசன் தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், தான் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த காலத்தில் கவலைக்கு மருந்து உட்கொண்டதாக கூறுகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவது வெட்கப்பட...

விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறிய பிரபல பல்பொருள் அங்காடிக்கு $1.2 மில்லியன் அபராதம்

Woolworths பல்பொருள் அங்காடி சுமார் 1200 விக்டோரியன் தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறியதை ஒப்புக்கொண்டதால் $1.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சூப்பர்மார்க்கெட்...

சவால்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் பதவியை எவ்வாறு வகித்தார் என ஸ்காட் மோரிசன் தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், தான் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த காலத்தில் கவலைக்கு மருந்து உட்கொண்டதாக கூறுகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவது வெட்கப்பட...

விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறிய பிரபல பல்பொருள் அங்காடிக்கு $1.2 மில்லியன் அபராதம்

Woolworths பல்பொருள் அங்காடி சுமார் 1200 விக்டோரியன் தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறியதை ஒப்புக்கொண்டதால் $1.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சூப்பர்மார்க்கெட்...