Cinemaடி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு...மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

டி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு…மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

-

தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியில் பரவியதால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக எனது தந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கவனித்தில் கொண்டு அவரை உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை நல்ல சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்து, அன்பு காட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் விரைவில் பூரணமாக குணமடைந்து வருவார்கள். விரைவில் அவர் ரசிகர்களை மீண்டும் சந்திப்பார் என சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் தற்போதும் தினமும் 15 பேர் வரை அவரை சந்தித்து வருவதாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1980 களில் சினிமாவில் அறிமுகமான டி.ராஜேந்தர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லலாமா என அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் விசா நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வெளிநாட்டிற்கு புறப்பட உள்ளதாக உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தொழில்துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்ப்

ஆஸ்திரேலிய எஃகுத் தொழிலுக்கு கடுமையான அடியாக, இறக்குமதிகள் மீதான தற்போதைய வரிகளை இரட்டிப்பாக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கிறார். ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன்...

நாளை முதல் உயரும் மாணவர் கடன் விகிதங்கள்!

நிலுவையில் உள்ள மாணவர் கடன்களைக் கொண்ட மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு $2.5 பில்லியனுக்கும் அதிகமான கடன் அதிகரிப்பு நாளை முதல் அமலுக்கு வரும். மாணவர் கடன்களை 20...

இளைஞர்களின் போதைப் பழக்கத்தால் முழு நாடும் ஆபத்தில்

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், Vaping-ஐ பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக ஒரு புதிய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் சுகாதார நிறுவனத்தின்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...