Cinemaடி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு...மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

டி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு…மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

-

தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியில் பரவியதால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக எனது தந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கவனித்தில் கொண்டு அவரை உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை நல்ல சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்து, அன்பு காட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் விரைவில் பூரணமாக குணமடைந்து வருவார்கள். விரைவில் அவர் ரசிகர்களை மீண்டும் சந்திப்பார் என சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் தற்போதும் தினமும் 15 பேர் வரை அவரை சந்தித்து வருவதாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1980 களில் சினிமாவில் அறிமுகமான டி.ராஜேந்தர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லலாமா என அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் விசா நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வெளிநாட்டிற்கு புறப்பட உள்ளதாக உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Latest news

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...

பெரும்பாலான வேலைகளை காப்பாற்றிய Cheap as Chips ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனைச் சங்கிலியான Cheap as Chips-இன் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Cheap as Chips சங்கிலி...

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...