News எதற்காக 'சாரி'...போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

எதற்காக ‘சாரி’…போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

-

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளின் சுவர்கள், வீதிகள் போன்ற பல இடங்களில் சிவப்பு நிறத்தில், பெரிய எழுத்துக்களால் சாரி என எழுதப்பட்டுள்ளது. கைகளால் எழுதப்பட்டு, திரும்பி பக்கமெல்லாம் சாரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் இதை யார் எழுதினார்கள், எதற்காக சாரி என குழம்பிப் போயினர்.

இது பற்றி போலீசில் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளி நிர்வாகத்தினர் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் கோபமடைந்த மாணவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்றே அனைவரும் நினைத்தனர். இருந்தாலும் எதற்காக சாரி கேட்டார்கள் என இப்போது வரை காரணம் தெரியவில்லை.

கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்மமான முறையில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உணவு விநியோகம் செய்யும் நபர்கள் பயன்படுத்தும் பெரிய பையில் இருந்து சிவப்பு நிற சாயத்தால் அவர்கள் பல இடங்களில் சாரி என்று எழுதுவது கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பாதிவாகி உள்ளது.

அந்த நபர்கள் யார், எதற்காக இப்படி செய்தார்கள் என போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். அந்த மர்ம நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இது போன்று செய்வது கர்நாடக போலீஸ் விதிகளின் படி தண்டைக்குரிய குற்றமாகும். அதனால் அந்த மர்ம நபர்களை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Latest news

மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு...

உலகில் மிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள்!

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை...

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியு...

491 விசாவிற்கான விண்ணப்பிக்க மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு வாய்ப்பு

Skilled Work Regional (subclass 491) விசா நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

குயின்ஸ்லாந்து வீட்டு வாடகைக்கான அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்க தீர்மானம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வீட்டு வாடகைக்கு அதிகபட்ச மதிப்பை நிர்ணயிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள Ferrari உரிமையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளிப்படும் அபாயம்

உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான Ferrariயின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலால் தாக்கப்பட்டுள்ளது. தாக்கிய தரப்பினரும் கப்பம் கேட்டுள்ளதாக...