Cinemaடி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு...மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

டி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு…மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

-

தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியில் பரவியதால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக எனது தந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கவனித்தில் கொண்டு அவரை உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை நல்ல சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்து, அன்பு காட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் விரைவில் பூரணமாக குணமடைந்து வருவார்கள். விரைவில் அவர் ரசிகர்களை மீண்டும் சந்திப்பார் என சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் தற்போதும் தினமும் 15 பேர் வரை அவரை சந்தித்து வருவதாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1980 களில் சினிமாவில் அறிமுகமான டி.ராஜேந்தர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லலாமா என அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் விசா நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வெளிநாட்டிற்கு புறப்பட உள்ளதாக உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...