Cinemaசமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து...காயங்களுடன் மீட்பு

சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து…காயங்களுடன் மீட்பு

-

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. காதலை மையமாகக் கொண்டு குஷி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

குஷி படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பின் போது, பாலத்தின் மீது காரில் செல்வது போல் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே கயிற்றால் தடுப்புகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள பாலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் இருவருக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மற்றொரு தகவலாக, படப்பிடிப்பு தளத்தில் அப்படி எந்த விபத்தும் நடைபெறவில்லை. விபத்து நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நடந்து அதில் சமந்தாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் காயம் ஏற்பட்டது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...