Cinemaசமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து...காயங்களுடன் மீட்பு

சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து…காயங்களுடன் மீட்பு

-

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. காதலை மையமாகக் கொண்டு குஷி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

குஷி படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பின் போது, பாலத்தின் மீது காரில் செல்வது போல் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே கயிற்றால் தடுப்புகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள பாலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் இருவருக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மற்றொரு தகவலாக, படப்பிடிப்பு தளத்தில் அப்படி எந்த விபத்தும் நடைபெறவில்லை. விபத்து நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நடந்து அதில் சமந்தாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் காயம் ஏற்பட்டது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...