Cinemaசமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து...காயங்களுடன் மீட்பு

சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து…காயங்களுடன் மீட்பு

-

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. காதலை மையமாகக் கொண்டு குஷி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

குஷி படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பின் போது, பாலத்தின் மீது காரில் செல்வது போல் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே கயிற்றால் தடுப்புகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள பாலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் இருவருக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மற்றொரு தகவலாக, படப்பிடிப்பு தளத்தில் அப்படி எந்த விபத்தும் நடைபெறவில்லை. விபத்து நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நடந்து அதில் சமந்தாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் காயம் ஏற்பட்டது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...