Cinemaசமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து...காயங்களுடன் மீட்பு

சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து…காயங்களுடன் மீட்பு

-

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. காதலை மையமாகக் கொண்டு குஷி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

குஷி படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பின் போது, பாலத்தின் மீது காரில் செல்வது போல் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே கயிற்றால் தடுப்புகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள பாலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் இருவருக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மற்றொரு தகவலாக, படப்பிடிப்பு தளத்தில் அப்படி எந்த விபத்தும் நடைபெறவில்லை. விபத்து நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நடந்து அதில் சமந்தாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் காயம் ஏற்பட்டது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...