Newsஇந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

இந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

-

இந்திய விமான துறை அமைச்சராக இருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் ’ஜெய் விலாஸ் மஹால்’ மாளிகையின் இன்றைய மதிப்பு 4000 கோடி ரூபாய் என்று கூறப்படுவது . குவாலியர் மாகாணத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் வம்சாவளிகள் தொடர்ந்து இந்த மாளிகையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

1874 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் இன்றைய இந்திய மதிப்பு ரூ.4,000 கோடி. ஐரோப்பிய கட்டடக்கலையின் அடிப்படையில் மைக்கேல் ஃபிலோஸ் என்பவர் இந்த மாளிகையை கட்டினார். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 771 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஜெய் விலாஸ் மாளிகை மூன்றடுக்கு கட்டிடமாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகை 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும் இன்றைய மதிப்பு ரூ.4,000 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 400 அறைகள் உள்ளன. இதில் 35 அறைகள் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் ஜான்சிராணி பயன்படுத்திய வாள்கள் மற்றும் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு கலை அம்சங்கள் கொண்ட பொருட்கள், முன்னோர்கள் பயன்படுத்திய ஆடம்பர கார்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாளிகையில் உள்ள உணவருந்தும் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேஜை ரயில் தண்டவாளம் போல் நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையை அலங்காரம் செய்வதற்கு 560 கிலோ தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாளிகையின் மேல்தளம், எட்டு யானைகளை கொண்டு நிறுத்தினாலும் உறுதிபட நிற்கும் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

Latest news

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்)...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவகையில் பயணத் திட்டங்களை அமைக்கும் ஆஸ்திரேலியர்கள்

உலகிலேயே அதிக செல்லப்பிராணி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே நாடு முழுவதும் செல்லப்பிராணி நட்பு விடுமுறைகள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. RSPCA இன்...