Newsஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

-

இந்தியாவில் மீண்டும் ஒமைக்காரனின் உருமாறிய பிஏ வகை வைரஸ் பரவுவது அதிகரிக்க துவங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தொழில் கல்லூரியில் ஒருவருக்கு பிஏ 4 வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பிஏ 5 வகை வைரஸ் மற்றொரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் கண்டறியப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மிக குறுகிய கால இடைவெளியில் ஓமைக்ரானின் உருமாறிய வடிவமான பிஏ வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. பிஏ 5 வகை வைரஸ் கண்டறியப்பட்ட இரு நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் மிக குறைந்த அளவிலேயே அறிகுறிகள் காணப்படுவதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ மாதிரிகள் தொடர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பிஏ 5 வகை வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்ட ஆர்டி – பிசிஆர் சோதனகைளில் பிஏ4 வகை வைரஸ் பரவ வில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிஏ5 வகை வைரஸ் இரண்டாவது நபருக்கு பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை உருமாறிய வைரஸ்கள் வேகமாக பரவவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒமைக்ரானின் உருமாறிய வைரஸ்களின் வகைகள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...